‘தமிழகத்திற்கு 20 லட்ச தடுப்பூசிகள் உடனே வேண்டும்’ – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!

0

நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி பணிகள் மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் உடனே 20 லட்ச தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது தடுப்பூசி பணிகளை மேலும் விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கடந்த சில நாட்களாகவே அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மருந்து நிறுவனங்களிடம் நாட்டின் பிரதமர் ஆலோசனை நடத்தினார். மேலும் கொரோனாவை விரட்டுவதற்கு ஒரே வழி தடுப்பூசி என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

#PBKSvsMI ஐபிஎல் போட்டி – எழுச்சி பெறுமா மும்பை இந்தியன்ஸ்??எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இதன் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்ச பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் காரணமாக 10 நாட்களுக்கு தேவைப்படும் 20 லட்ச தடுப்பூசியை தமிழகத்திற்கு முன்கூட்டியே அனுப்புமாறு நாட்டின் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here