இந்தியாவில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஐதராபாத் அணியின் யார்கர் மன்னன் நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடராஜன்
கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் தனது யார்கர் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறவைத்தார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். மேலும் இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் மூலம் தனது சர்வதேச பயணத்தை தொடங்கினார். அவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மிக சிறப்பாக பந்து வீசி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் நடராஜன் மிக சிறப்பாக பந்து வீசி வந்தார். அதன் பின்பு இவர் இந்திய அணியில் தனக்கான இடத்தை மிக கெட்டியாக தக்க வைத்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் 14வது ஐபிஎல் தொடர் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த முறையும் ஐபிஎல் தொடரில் நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இந்நிலையில் இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் கடந்த 2 போட்டிகளில் ஐதராபாத் அணியில் இடம்பிடிக்கவில்லை. இந்நிலையில் இவரது காயத்தின் நிலை மிக தீவிரமாக இருப்பதால் நடராஜன் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறார் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தெரிவித்துள்ளது. இவரது விலகல் ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். தற்போது நடராஜன் விலகினால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.