கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சேது ஐஸ்வர்யாவை தொடர்ந்து கொடுமைபடுத்துகிறார். ஐஸ்வர்யாவை நினைத்து சிவா மிகவும் வருந்துகிறார். அவரை சஹானா சமாதானம் செய்கிறார்.
“இதயத்தை திருடாதே” சீரியல்
இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சேது ஐஸ்வர்யாவை வேண்டுமென்றே கீழே விழ வைக்கிறார். இதனால் ஐஸ்வர்யா மிகவும் நொந்து போகிறார். அவர் கவலையில் ‘அண்ணா, அண்ணா’ என்று கதறுகிறார். இது சேதுவை மேலும் கோபத்தினை ஏற்படுத்துகிறது. சேதுவின் கொடுமை தாங்க முடியாமல் ஐஸ்வர்யா அழுது கொண்டே இருக்கிறார்.
கொரோனாவால் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மகன் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்!!
ஐஸ்வர்யாவிற்கு கீழே விழுந்ததால் காலில் அடிபட்டும் விடுகிறது. பின், சிவாவின் அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் நாளை ஐஸ்வர்யாவையும் சேதுவையும் விருந்துக்கு அழைக்க இருக்கின்றனர் என்பதால் சிவா மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அவரது மகிழ்ச்சியினை கண்டு சஹானாவிற்கு சிறிது வருத்தமாகவும் இருக்கிறது. அதே போல் சேது வரும் போது எந்த ஒரு கோபத்தினையும் வெளிப்படுத்த கூடாது என்று சஹானா சொல்கிறார்.
சிவாவும் சரி என்று கூறி விடுகிறார். பின், அடுத்த நாள் சிவாவின் அப்பா மற்றும் சித்தப்பா இருவரும் தாட்சயினி வீட்டுக்கு செல்கின்றனர். ஐஸ்வர்யா இவர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். பின், சிவாவின் அப்பா தாட்சயினிடம் விருந்து குறித்து பேசுகின்றனர். தாட்சயினி சேதுவிற்கு இது போன்ற சம்பிரதாயங்கள் பிடிக்காது என்றும், அதனால் தற்போது அனுப்ப முடியாது என்றும் கூறி விடுகிறார். தான் சேதுவிடம் பேசி விட்டு சொல்வதாகவும் தெரிவித்து விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், சிவா அப்பா எவ்வளவு கூறியும் அவர் கேட்பதாக இல்லை என்றதும் அவர்கள் கிளம்பி விடுகின்றனர். இப்படியாக இருக்க, சேது மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்கு வர இருக்கின்றனர் என்பதால் சிவா வீட்டில் விருந்திற்கு தயார் செய்து வருகின்றனர். சேதுவை எப்படியோ சமாதானப்படுத்தி தாட்சியினி அவரை சிவா வீட்டிற்கு கிளம்ப சொல்கிறார். பின், சேது வந்து ஐஸ்வர்யாவிடம் ‘இன்னைக்கு உங்க வீட்ல இருக்குற எல்லாரையும் வெச்சு செய்ய போறேன்” என்று விட்டு சேது சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.