பொது இடங்களில் மாஸ்க் இல்லையெனில் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – தமிழக அரசு அதிரடி!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் பல தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு  ஏறு முகத்தில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதே போல் பொது இடங்களில் மாஸ்க் அணிதல், எச்சில் துப்ப தடை, சமூக இடைவெளி போன்ற பல நடவடிக்கைகளை மக்களை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதனை பின்பற்ற மீறுபவர்களிடம் தக்க அபராதத்தையும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக தலைமை செயலகம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தலைமை செயலகத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மகன் மரணம் – அதிர்ச்சியில் மக்கள்!!

அதன்படி தலைமை செயலக ஊழியர்கள் எவரேனும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200, தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 மற்றும் பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைபிக்கவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here