‘நேத்து நைட் உங்க அப்பா என் பொண்டாட்டி கூட தான் கூத்தடிச்சுட்டு இருந்தான்’ – எழிலிடம் உண்மையை போட்டு உடைத்த ராஜேஷ்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சந்தோஷ் இடம் பேசாமல் தவிர்க்கிறார். இதனால் பாக்கியா இனியாவிற்கு அட்வைஸ் செய்கிறார். மேலும் எழிலுக்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் வீட்டில் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டுள்ளது. ஆனால் அனைவரும் பாக்கியாவை தான் குற்றம் சொல்ல ஆரம்பிக்கின்றனர். மேலும் பாக்கியாவை மசாலா பவுடர் பிஸ்னஸை செய்ய கூடாது என்றும் கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு செழியனும் சப்போர்ட் செய்கின்றார். இது ஜெனிக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. அடுத்து இனியா ஸ்கூலில் சந்தோஷிடம் பேசாதத்தை பார்த்து பாக்கியா ஏன் என்று கேட்கிறார். அவனால் தானே இவ்வளவு பிரச்சனையும் என்று சொல்கிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை, இந்த படிப்பை மட்டும் நீ நல்ல படியா முடிச்சுட்டா அது தான் உனக்கு நிரந்தர சந்தோசம்.

அதுவரை சந்தோஷ் கிட்ட நார்மலா பேசு. எல்லார்கிட்டயும் எப்படி பேசுறியோ அதே மாதிரி பேசு. அவனுக்குனு தனியா முக்கியத்துவம் கொடுக்காத என்று கூறுகிறார். இதற்கு இனியாவும் ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக பாக்கியா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டுள்ளனர்.

பொது இடங்களில் மாஸ்க் இல்லையெனில் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – தமிழக அரசு அதிரடி!!

அப்பொழுது செழியன் தண்ணீர் எடுக்க சொல்கிறார். அதற்கு ஜெனி பக்கத்தில் தானே இருக்கு எடுத்துக்கோ என்று சொல்கிறார். இதற்கு செழியன் பாட்டி திட்ட எழில் இன்னொரு பாக்கியா இனிமேல் உருவாக வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ஜெனியும் ஆமாம் என்று கூறுகிறார்.

நான் பாக்கியா ஆண்ட்டியை எப்படி வெளிய கொண்டு வரதுன்னு பாத்துட்டு இருக்கேன் என்று சொல்கிறார். அடுத்து ஜெனி மசாலா வாங்க நிறைய பேர் கேட்ருக்காங்க என்று சொல்கின்றார். அப்பொழுது கோபி அங்கு வருகிறார். இதனால் பேச்சை நிறுத்துகின்றனர். அப்பொழுது எதுக்கு பேச்சை நிறுத்துனீங்க என்று கேட்க மசாலா பிஸ்னஸ் பற்றி பேசுகின்றனர்.

இதனால் கோபி கத்துகிறார். அந்த லேடி ராதிகா கிட்ட வாங்குன கடனுக்கு அந்த மெஷினை வித்துட்டு அந்த காசை கொடுத்துடு என்று சொல்கிறார். இதனால் அனைவரும் ஷாக்காகின்றனர். அடுத்ததாக எழில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டுள்ளார். அப்பொழுது ராதிகாவின் கணவர் ராஜேஷ் அங்கு வருகிறார்.

எழில் யார் என்று கேட்க உங்க அப்பா என் பொண்டாட்டியை பார்க்க வருகிறார் என்று சொல்கிறார். என் பொண்டாட்டிக்கும் உன் அப்பாவுக்கு தொடர்பு இருக்கு என்று கூறுகிறார். இதனால் ஷாக்காகிறார் எழில். மேலும் போட்டோவை வேறு காட்டுகிறார். அதனை பார்த்ததும் மேலும் ஷாக்காகிறார் எழில். உங்க அப்பாவை புடுச்சு போயி தான் என் பொண்டாட்டி டிவோர்ஸ் கேக்குறா?? நேத்து நைட் உங்க அப்பா என் பொண்டாட்டி கூட தான் இருந்தா என்று சொல்கிறார்.

அப்பொழுது எழிலுக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் வருகிறது. இதனை பாக்கியாவிடம் சொல்ல போவதாக சொல்கிறார். ஆனால் இதனை எங்க அம்மாவால தாங்க முடியாது என்று கெஞ்சுகிறார் எழில். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here