தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்று தொடர்ந்து எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 செய்முறை தேர்வு
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது. இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்வி பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி(12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12ம் வகுப்பிற்கு திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அவர்களுக்கு வழக்கம் போல் நேரடி வகுப்புகளும் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாகவே கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வை அனைவரும் ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தனர்.
‘அப்பவே நீங்க விஜய் டிவியில இருந்தீங்களா அஸ்வின்’ – வைரலாகும் புகைப்படம்!!
இந்நிலையில் தற்போது பிளஸ் 2 வகுப்பிற்கான செய்முறை தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் வருகிற 23ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறவுள்ளது. மாணவர்களின் நலன் கருதி 4 பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தேர்வின் போது கொரோனாவிற்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கையும் பின்பற்றபட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்களுக்கு வேறு நாளில் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.