விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரும் கடையில் வாடிக்கையாளர்களை எப்படி வரவழைக்கலாம் என்று குறித்து பேசி வருகின்றனர். அதன் பிறகு தங்களது குழந்தையுடன் தனம் மற்றும் மூர்த்தி இருவரும் பேசுகின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று வீட்டில் உள்ள அனைவரிடமும் டோர் டெலிவரி குறித்து பேசுகின்றனர். கதிர், மூர்த்தி மற்றும் ஜீவா மூவரும் அன்று நடந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விவரிக்கின்றன. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படியாக இருக்க, கண்ணன் இனி டோர் டெலிவரியை வாட்ஸ்அப் மூலமாகவும் செய்யலாம் என்றும் கூறுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பிளஸ் 2 செய்முறை தேர்வு – இன்று முதல் துவக்கம்!!
அந்த ஐடியா நன்றாக இருப்பதாக கூறி அனைவரும் அதனை ஆமோதிக்கின்றனர். அப்போது மீனா கதிரிடம் ஒரு நல்ல ஸ்மார்ட் போன் கூட இல்லை என்று கூறி கேலி செய்கிறார். இதனால் கடுப்பாகும் முல்லை தனது போனை வைத்து கொள்ளுமாறு கூறுகிறார். அப்போது மூர்த்தி தாங்கள் புது போன் வாங்கி தர தயாராக இருப்பதாகவும், கதிர் தான் வேண்டாம் என்று கூறி மறுப்பதாகவும் சொல்லுகிறார்.
பின், இப்படியாக இருக்க மூர்த்தி மற்றும் தனம் இருவரும் தங்களது குழந்தையை பற்றி பேசுகின்றனர். இப்போது எல்லாம் குழந்தை அதிகமாக உதைப்பதாக தனம் கூறுகிறார். குழந்தை என்றால் அப்படி தான் இருக்கும் என்று கூறும் மூர்த்தி, தனது குழந்தைக்கு அறிவுரை கூற ஆரம்பித்து விடுகிறார்.
இதனால் பொய் கோபம் அடையும் தனம் எழுந்து சென்று விடுகிறார். பின், மீனா மற்றும் ஜீவா இருவரும் தங்களது குழந்தையை கொஞ்சுகின்றனர். அப்போது மீனா அன்று தனது தந்தை ஜீவாவை தனது கடைக்கு வரவழைக்கும் தந்திரத்தினை குறித்து விவரிக்கிறார். இது தனக்கு தெரிந்தது தான் என்று ஜீவா கூறிவிடுகிறார்.
அதே போல் மீனா தனது குடும்பத்திற்காக அவரது தந்தையிடம் பேசியது ஜீவாவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பின், முல்லை கதிரிடம் தனது போனை பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார். தான் வைத்திருக்கும் போன் தான் தனக்கு நன்றாக உள்ளது என்று கூறி கதிர் முல்லையின் போனை பயன்படுத்த மறுத்து விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முல்லை அதன் பிறகு கதிரை பாடங்களை படிக்க சொல்லி அறிவுறுத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.