சிபிஐ முன்னாள் இயக்குனர் காலமானார் – அதிகாரிகள் அஞ்சலி!!

0

சிபிஐ முன்னாள் இயக்குனரான ரஞ்சித் சின்ஹா உடல் நல குறைவால் இன்று காலை காலமானார். தற்போது இவருக்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஞ்சித் சின்ஹா

ரஞ்சித் சின்ஹா, இவர் சிபிஐ துறையில் முன்னாள் இயக்குனர் ஆவார். அதுமட்டுமல்லாமல் ஐ.டி.பி.பி காவல்துறை இயக்குனர் ஜெனரலாகவும், ரயில்வே பாதுகாப்பு துறை இயக்குனர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் இவர் டெல்லி மற்றும் பாட்னா பகுதியில் சிபிஐயின் மூத்த அதிகாரியாக மிக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் ஊழலுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். இவர் சிபிஐ பொறுப்போடு சேர்த்து வருமான வரித்துறை மற்றும் சி.வி.சி ஆகியவற்றுடன் இணைந்து ஊழலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மேலும் 2,17,353 பேருக்கு கொரோனா – 1,185 பேர் பலி!!

இந்நிலையில் இவர் சில காலமாக தனது உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று யாரும் எதிர்பாராத வகையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இவர் டெல்லியில் உயிரிழந்தார். இவருக்கு 64 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிகாரிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here