‘ரிஷாப் பாண்ட்டின் செயல் எனக்கு பிடிக்கவில்லை’ – கடுப்பான ரிக்கி பாண்டிங்!!

0

நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அதில் கடைசி கட்டத்தில் ராஜஸ்தானை அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்நிலையில் டெல்லி அணி பயிற்சியாளர் இது குறித்து பேசியுள்ளார்.

ரிக்கி பாண்டிங்:

நேற்று நடத்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. நேற்று டெல்லி அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சொதப்பியது. முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மிக சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி இந்த முறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மேலும் ரிஷாப் பாண்ட் நேற்று செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காரணம், நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் அஸ்வின் மிக சிறப்பாக பந்து வீசி வந்தார். அவர் வீசிய 3 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு பவுண்டரி கூட அவர் விடவில்லை. அதேபோல் விக்கெட் எதுவும் அவர் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஓவரில் மிக சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தி வந்தார் அஸ்வின்.

அட்டமிழந்த கோஹ்லி ஆத்திரத்தில் செய்த செயல் – ஐபிஎல் நிர்வாகம் கண்டனம்!!

ஆனால் இவருக்கு நேற்று மூன்று ஓவர் மட்டுமே வழங்கினார் ரிஷாப் பாண்ட். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு 4வது ஓவர் வழங்கிருந்தால் அவர் கட்டாயமாக மில்லரின் விக்கெட்டை எடுத்திருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். அதன்படி அவர் கூறியதாவது, முதல் போட்டியில் அஸ்வின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை.

ஆனால் நேற்றைய போட்டியில் அவர் மிக சிறப்பாக பந்து வீசினார். அதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். நேற்று விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும், அவர் மிக சிறப்பாக தனது ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி வந்தார். ஆனால் அவருக்கு 4 வது ஓவர் கொடுக்காதது பெரிய தவறு, ரிஷாப் பாண்ட் செய்த செயல் எனக்கு பிடிக்கவில்லை. இதை பற்றி நான் கண்டிப்பாக அணியினருடன் பேசுவேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here