நாட்டில் கொரோனா நோய்த்தொற்று சில நாட்களாகவே அதிகமானவர்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர பொதுமுடக்கத்தின் கால அளவை நீட்டித்துள்ளனர்.
இரவு நேர பொதுமுடக்கம்:
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு சுகாதாரத்துறையினர் பல கட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டில் தற்போது தடுப்பூசி பணிகள், பரிசோதனை போன்றவற்றை முழுவீச்சில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் சில மாநிலங்களில் மிக அதிகமான அளவில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தடுக்கும் வகையில் சில மாநிலங்களில் முழு நேர ஊரடங்கும், சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
‘2011 ல 21ஜி பஸ், 2021 ல பிஎம்டபிள்யூ கார்’ – வேற லெவலில் ரம்யா பாண்டியன்!!
ஆனால் அங்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக தற்போது அந்த மாநிலத்தின் முக்கிய 10 மாவட்டங்களில் இரவு நேர பொதுமுடக்கத்தின் கால அளவை நீட்டித்துள்ளனர். அதன்படி லக்னோ, நொய்டா, ப்ரக்யாராஜ் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.