தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10 மற்றும் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறையுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய் பரவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது தமிழகத்தில் மிக அதிகளவிலான கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி(12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசிற்கு கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 12ம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்று அறிவித்தனர். மேலும் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருவதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அல்லது ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்.
கொரோனா அதிகரிப்பு எதிரொலி – இந்த 10 இடங்களில் இரவு நேர பொதுமுடக்கம் நீட்டிப்பு!!
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் எதிரொலியாக 3ம் தேதி நடைபெறவுள்ள மொழிப்பாடம் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பள்ளிக்கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் ஆலோசனை முடிவு முதல்வருக்கு அனுப்பட்டு அவரே இதுகுறித்த இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.