தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை
தமிழக வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளுக்கான வானிலை அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளியின் வைல்ட் கார்டில் ஜெயிச்சது யாரு தெரியுமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!
நாளை முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக தெளிவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு எதுவும் இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது மட்டுமின்றி இன்றைய அறிக்கையில் வெப்பநிலை முன்னறிவுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியில் வீச கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தின் சென்னை, ராயப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பினை விட வெப்பநிலை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.