தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தகவலினால் தமிழக மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சுமார் ஆயிரத்தை தாண்டி வருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரச்சார வேலைகளும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றாமல் நடந்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் தற்போது மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை மறந்துவிட்டனர். இதன் காரணமாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும் மிக தீவிரபடுத்தியுள்ளனர். இதற்காக தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 10 லட்ச கொரோனா தடுப்பூசி டோஸ்களை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள நிலவரத்தை பார்த்த சுகாதாரத்துறை தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.
மறுபடியும் லாக்டவுனா, ரொம்ப கஷ்டம் தான் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அந்தந்த மாநில அரசுகளே சூழ்நிலைகளுக்கேற்ப முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இன்னும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டு விடுமோ, வேலைகளை இழந்து விடுவோமோ என்று மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.