பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம்
நாளை மறுநாள் பிப்ரவரி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரமான பணி வழங்குவது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் என அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புதிய விதிமுறைகளை ஏற்க கட்டாயப்படுத்தும் வாட்ஸ் ஆப் – அதிர்ச்சியில் பயனாளர்கள்!!
கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் மற்ற அதிகாரிகளுடன், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் முடிவு கிடைக்கப்பெறாத சூழலில், பிப்ரவரி 25 முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் மீண்டுமாக ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.