புதிய விதிமுறைகளை ஏற்க கட்டாயப்படுத்தும் வாட்ஸ் ஆப் – அதிர்ச்சியில் பயனாளர்கள்!!

0

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்தது. தற்போது அந்த விதிமுறைகளை ஏற்க கட்டாயப்படுத்துகிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். இதனால் தற்போது பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் ஆப்:

மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் செயலியாக திகழ்கிறது வாட்ஸ் ஆப் செயலி. இந்த செயலி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல அம்சங்களை படைத்தது வருகிறது. இதனாலேயே மக்கள் அனைவரும் இந்த செயலிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தற்போது சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் செயலி புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த விதிமுறை படி பயனாளர்களின் டேட்டா அனைத்தையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் பெறுவதற்கு நாம் அனுமதி அளித்தால் மட்டுமே நம்மால் இந்த செயலியை பயன்படுத்த முடியும் என்று அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த அறிவிப்பினால் பயனாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதற்கு பல சர்ச்சைகள் கிளம்பின. சிலர் இந்த செயலிக்கு பதில் மாற்று செயலியை பயன்படுத்தி வந்தனர். மேலும் இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியதாவது, பயனாளர்களின் டேட்டா அனைத்தும் பாதுகாப்பான முறையில் தான் இருக்கும் என்று அறிவித்தது. தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன் – விற்பனையில் புதிய சாதனை!!

அதன்படி வரும் மே மாதம் 15ம் தேதி முதல் இந்த புதிய கொள்கை அமலுக்கு வரும் என்று அறிவித்தது. மேலும் மே 15ம் தேதிக்கு அடுத்த 120 நாட்களில் பயனாளர்கள் அனைவரும் இந்த புதிய கொள்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. அப்படி அனுமதி அளிக்கவில்லை என்றால் இந்த செயலியை பயன்படுத்த முடியாது என்றும் அறிவித்துள்ளது. தற்போது இந்த தகவலினால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here