எப்எம்சிஜி நிறுவனம் தனது பொருட்களின் விலையை அதிகபட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தனது நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்எம்சிஜி நிறுவனத்தின் தயாரிப்புகள்:
மக்கள் அத்தியாவசியமாக பயன்படுத்தும் பொருட்களை எப்எம்ஜிசி நிறுவனம் தயாரிக்கிறது. மக்கள் வாங்கும் பிஸ்கட் முதல் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வரை தயாரித்து விற்கிறது. இந்தியாவின் முன்னணி கூட்டு நிறுவனமாகவும் இது திகழ்கிறது. இந்தியாவின் நிறுவனமான மரிக்கோ ஏற்கனவே தனது தயாரிப்புகளின் விலையினை உயர்த்தியுள்ளது.
இதனால் ஏற்கனவே மக்கள் பயத்தில் உள்ளனர். இப்படியான சூழலில் எப்எம்சிஜி நிறுவனமும் தனது தயாரிப்புகளின் விலையினை அதிரடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தினை சரி செய்ய விலை உயர்த்தப்பட இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக வட்டாரம் தெரிவித்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே, எப்எம்சிஜி நிறுவனம் மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாற்றம் காரணமாக பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்படியான சூழலில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதும் மக்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து இந்தியாவின் பதஞ்சலி, டாபர் மற்றும் பார்லேஜி நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.