பாக்ஸிங் டே டெஸ்டில் முதல் நாளான இன்று இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கு கேப்டன் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
பாக்ஸிங் டே டெஸ்ட் :
தற்போது நடந்து வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வைத்து நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்க போவதால் இந்தியா சென்றுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
எனவே இந்திய அணியை ரஹானே இனி வரும் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்துவார். இன்று இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. ஸ்விங்கில் அஸ்வினும், வேகத்தில் பும்ராஹ்வும் மிக சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.பும்ராஹ் 4 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். மேலும் அறிமுக வீரரான சிராஜ் முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 195 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்துள்ளது. அதன் பின் தனது இன்னிங்சை துவங்கிய இந்தியா அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.
அமெரிக்காவை முந்தி பொருளாதார வல்லரசாகும் சீனா – ஆய்வறிக்கையில் தகவல்!!
தற்போது இன்றைய போட்டியை குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, முதல் நாள் நமக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது, மேலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். முதல் நாள் ஆட்டத்தை சிறப்பாக முடித்துள்ளோம்” என்று தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.