ரஜினிகாந்த நடித்துவரும் அண்ணாத்த படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், அவரின் பாதுகாப்பு கருதி ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்று:
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன், குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா ஆகியோரும் நடித்து வருகின்றனர். கடந்த 2019 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பானது, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட உடனடியாக தொடங்க முடியாத நிலையில் கடந்த மாதம் தொடங்கி ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிடியில் நடந்து வரும் படப்பிடிப்பில் தற்போது ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் படக்குழுவினரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் ரஜினி உடன் நடித்த 8 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னை தனிமைபடுத்திக் கொண்டதை தொடர்ந்து சென்னை திரும்புகிறார்.
இது குறித்து அந்த படத்தை தயாரித்து வரும் சன் பிச்சர்ஸ் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் , “அண்ணாத்த படக்குழுவினரிடம் வழக்கமாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பின் பொருட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
படப்பிடிப்பில் சமூக விலகல், கிருமி நாசினி உபயோகித்தல், மாஸ்க், கையுறை அணிதல் போன்ற கொரோனா விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. படக்குழுவில் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்திருந்தது.
வரும் ஜனவரி மாதம் ரஜினி புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில் அவருக்கு வசதியாக படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ரஜினி சென்னை திரும்புகிறார். வரும் 31 ம் தேதி தனது புதிய கட்சி தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.