விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டாஸ்கை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த பால் கேட்ச் டாஸ்கில் பல சண்டைகளும் ஏற்பட்டு வருகிறது. அர்ச்சனா போன பிறகும் குரூப்பிஸம் நடந்து கொண்டு தான் உள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன வாரம் அர்ச்சனா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இனிமேலாவது அமைதியாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் அனிதா ஆரம்பித்து விட்டார். இத்தனை நாட்கள் அவர் கத்தி பேசியது, சிரிக்கிறேன் என்ற பெயரில் பார்ப்பவரை பயமுறுத்தியது எல்லாம் செய்து விட்டு ஷிவானி கத்தியதற்கு சண்டையை ஆரம்பித்து விட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது ரசிகர்களை மிகவும் கடுப்பாக்கியது. டாஸ்கில் கூட ஆரி அவரின் கணவரை பற்றி ஏதோ பேச வருவதற்குள் அனிதா காட்டுக்கத்து கத்தினார். இவருக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயம் என்பது போல நடந்து கொள்கிறார். இந்த வாரத்தில் ஷிவானி, ஆரி, ஆஜித், அனிதா, கேபி போன்றோர் நாமினேஷனில் உள்ளனர்.
அனிதா செய்வதை எல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேறுவது அனிதா தான். மேலும் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் என்ற டாஸ்கை கொடுத்துள்ளார். சின்ன பால், பெரிய பால் என அனுப்பப்படும்.
கலர் கலரான உடையில் நடனமாடும் சமந்தா!!
யார் எதனை பிடிக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல பாயிண்ட்ஸ் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரியும், பாலாவும் முன்னாடி நின்று அனைத்து பால்களையும் பிடிக்க ரியோ சண்டையிடுகிறார். அடுத்த ப்ரோமோவில் சோம் மற்றும் பாலாஜி இடையே சண்டை ஏற்படுகிறது.
மேலும் அர்ச்சனா வெளியேறினால் சோம், ஆரி, கேபி தனியாக விளையாடுவார்கள் என்று பார்த்தால் இப்பொழுது கூட அந்த குரூப்பிஸம் தான். மேலும் பலரும் கமெண்டில் அனிதா கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று தான் கூறி வருகின்றனர்.