‘என் புருஷனை பத்தி பேசாதீங்க ஆரி’ – சந்திரமுகியாக மாறிய அனிதா!! தெறிக்கவிடும் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வெளியேறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அனிதா ஆரி ஏதோ சொன்னதற்கு கண்டபடி கத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது தான் ஆரம்பித்தது போல உள்ளது. ஆனால் 75 வது நாளை கடந்துவிட்டது. வாராவாரம் ஒருவர் எலிமினேட் ஆகியும் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் தான் போன வாரம் டபுள் எவிக்ஷன் இருந்தது. இத்தனை நாட்கள் அர்ச்சனா ஆட்டி வைத்திருந்த அன்பு கேங் ஆட்டம் கண்டது என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வாரத்தில் அர்ச்சனா வெளியேறினார். இனிமேலாவது சோம், ரியோ, கேபி போன்றவர்கள் தனித்து ஆடுவார்களா?? என்பதை இனிமேல் தான் பார்க்க முடியும். இப்பொழுது ப்ரோமோ வேறு வெளியாகியுள்ளது. அதில் இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் வழக்கம் போல இந்த வாரத்தின் நாமினேஷன் ப்ராஸஸ் நடந்துள்ளது.

அதில் அனிதா ஷிவானியை நாமினேட் செய்துள்ளார். மேலும் இத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருந்து இவர் என்ன செய்தார்? என்றும் கூறியுள்ளார். அவர் சொல்வதும் வாஸ்தவம் தானே. மேலும் ஆரி, ஆஜித் போன்றவர்களையும் நாமினேட் செய்துள்ளனர். அப்படி என்றால் இந்த வாரத்தில் ஆஜித் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. மேலும் அனிதாவையும் நாமினேட் செய்தார்களா?? என்பதும் தெரியவில்லை. ஆனால் அனிதா நாமினேட் ஆனால் கண்டிப்பாக இந்த வாரத்தில் வெளியேறுவது அவர் தான்.

அடுத்த ப்ரோமோவில் பிக் பாஸ் மாட்டுனியா?? என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதில் ஒரு போட்டியாளர் முன்வந்து இன்னொரு போட்டியாளரை கையில் அடிக்க வேண்டும். அப்படி அடித்து விட்டால் ஒரு சீட்டை எடுத்து அதில் எழுதி இருப்பதற்கு ஏற்றவாறு ஒரு கேள்வியை கேட்க வேண்டும். அதில் ரம்யாவை ஆரி அடுத்த வாரம் யாரை நாமினேட் செய்வீர்கள் என்று கேட்டதற்கு ஆஜித் மற்றும் கேபி என்று கூறினார். அடுத்த ப்ரோமோவும் வெளியானது.

தொடையழகை காட்டி போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!!

அதில் ஷிவானி ஆரியிடம் யார் இந்த வீட்டில் டிமோட்டிவாக உள்ளார் என்று கேட்டதற்கு அனிதாவை சொல்கிறார். அனிதா தான் தன்னை பற்றி அம்மா, அப்பா & கணவர் என்ன நினைப்பார் என்று யோசித்துக்கொண்டே இருப்பதாக கூறினார். அவ்வளவு தான் அனிதா வழக்கம் போல கத்த ஆரம்பித்து விட்டார். என் அம்மா, அப்பா, பிரபாவை பற்றி பேசாதீங்க என்று சந்திரமுகி போல கத்தியுள்ளார்.

ஆரி சொல்ல வருவதற்குள் என்னென்னவோ பேசி கத்துகிறார். அப்படி என்றால் இத்தனை நாட்கள் அம்மாவையும் தனது கணவரையும் பற்றி பேசியது அனிதா தானே. மேலும் போன வாரம் அர்ச்சனா அவரது கணவரை பற்றி பேசியதற்கு கூட சிரித்துக் கொண்டு தானே இருந்தார். இப்போ ஆரி மட்டும் சொன்னதற்கு இவருக்கு ஏன் இத்தனை கோவம் என மக்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here