சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளால் பங்குச்சந்தை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ்வழி மாணவர்களுக்கு TNPSC தேர்வில் 20% இடஒதுக்கீடு!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ.24 குறைந்து ரூ.4,684க்கும், ஒரு சவரன் 192 ரூபாய் சரிந்து ரூ.37,472க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் 68 ரூபாயாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.