இன்று (9/12/20) காலை 8 மணியிலுருந்து செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை தற்போது நடத்தி வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை, கரூர், கோவை, காஞ்சிபுரம், ஹைதராபாத், மும்பை உட்பட 50க்கும் மேற்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. செட்டிநாடு குழுமம் சிமெண்ட் உற்பத்தி, மின் உற்பத்தி, நிலக்கரி, மருத்துவ பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவத்துறை, போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.
தாராளமாக குறையும் தங்கத்தின் விலை!!
சோதனை குறித்த முழுமையான தகவல்களை இன்னும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்படவில்லை.