Monday, May 13, 2024

ஒட்டு எண்ணிக்கையை தடுத்து நிறுத்துவேன் – டிரம்ப் மிரட்டல்!!

Must Read

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதிக்கான தேர்தலுக்கான ஒட்டு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கும் வேளையில் தேர்தலின் முக்கிய வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் எண்ணிக்கையில் மோசடிகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்கா தேர்தல்:

அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜோ பிடன் மற்றும் ஆளும் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டனர். தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, இன்று ஒட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. காலை முதல் தொடங்கிய ஒட்டு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வரை ஜோ பிடன் முன்னிலை வகித்து வருகிறார். சில இடங்களில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகித்து வருகின்றார், சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “புளோரிடா, டெக்சாஸ் போன்ற முக்கியமாக கருதப்படும் மாகாணங்களில் வெற்றி கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த மாகாணங்களில் என்னை வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்களும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்”

சர்ச்சை கருத்து:

“பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சினில் போன்ற மாகாணங்களிலும் வெற்றி கிட்டும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனால், ஒட்டு எண்ணிக்கை குறித்து மக்கள் அனைவர்க்கும் நான் ஒன்றை தெரிவித்து கொள்கின்றேன். இந்த ஒட்டு எண்ணிக்கை விவகாரத்தில் பலவித குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது”

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“அதே போல் பல குளறுபடிகள் மற்றும் மோசடிகளும் நடந்துள்ளது. இதற்காக ஒட்டு எண்ணிக்கை நடவடிக்கையை தடுத்து நிறுத்த நான் கண்டிப்பாக உச்சநீதிமன்றம் செல்வேன்” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார். ஒட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் அவர் இது போன்ற சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இவர் கூறியிருக்கும் இந்த கருத்துக்கள் காரணமாக பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -