2020ம் ஆண்டில் பல ஈடுசெய்ய முடியாத இழப்புகளை கலைத்துறை சந்தித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ, வெண்டிலேட்டர் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மீண்டு வர வேண்டி திரையுலகினர், ரசிகர்கள் கூட்டு பிராத்தனை நடத்தினர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 74 வயதான எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று நள்ளிரவு சரியாக 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
பாடும் நிலா எஸ்பிபி அவர்களின் மறைவு ரசிகர்களையும், திரையுலக நட்சத்திரங்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.