தற்போது உள்ள காலத்தில் பெண்கள் பலர் புருவ முடிகளை அழகு நிலையங்களுக்கு சென்று திருத்தம் செய்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஆனால் புருவ முடிகளை திருத்துவதால் நமது ஆயுட்காலாம் கூட குறையுமாம்.
புருவம் எடுப்பதால் ஏற்படும் விளைவு??
தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் பலர் அழகு நிலையங்களில் தான் தனது பாதி வருமானத்தை செலவிடுகின்றனர். கெமிக்கல் நிறைந்த பொருட்களை முக அழகிற்கு பயன்படுத்துவது அவர்களின் சருமத்திற்கு பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் ‘த்ரெட்டிங்’ என்ற பெயரில் புருவ முடிகளை திருத்தி கொள்கின்றனர்.
ஆனால் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நமது உடலில் புராணம் புருவத்தில் தான் இயங்கி வருகிறது. எனவே புருவங்களில் திருத்தம் செய்யும்போது நமது ஆயுளையே பாதிக்கிறது. நமது இறப்பு காலம் வரும்போது நமது புருவ முடிகள் தான் பலகீனம் அடையும். வயதான காலத்தில் புருவ முடிகளை தொட்டாலே உதிர்ந்து விடும். நமது கண்களை சுற்றி பல வர்ம பகுதிகள் உள்ளன.
இதனால் நாம் த்ரெட்டிங் செய்யும்போது அந்த வர்மா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பலருக்கு இது பற்றிய எந்த தகவல்களும் தெரிவதில்லை. இதனால் புருவ முடியை த்ரெட்டிங் செய்யும்போது நமது பிராணன் குறைகிறது. பல நோய்களையும் ஏற்படுத்துகிறது.
இது குழந்தை பெறுவதில் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பிறக்கும் குழந்தைகளுக்கு பிராண சக்தியை குறைக்கிறது. எனவே தான் இரவில் தூங்கும் முன் விளக்கெண்ணெயை புருவத்தில் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். மேலும் உடலில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு த்ரெட்டிங் செய்யாமல் இருப்பது நல்லது.