பாடகர் எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் – பிரபலங்கள் வருகை, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு!!

0

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சீராக இருந்த உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமடைய தொடங்கியது. இதனால் வெண்டிலேட்டர், எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 7ம் தேதி எஸ்பிபி அவர்களின் மகன் சரண் வெளியிட்ட வீடியோவில், கொரோனா தொற்றில் இருந்து எஸ்பிபி மீண்டு விட்டதாகவும், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

spb
spb

இந்நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பாடகர் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக கூறப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு விரைந்தார். அவர் பேசுகையில், எஸ்பிபி தற்போது நலமாக இருப்பதாக கூற முடியாது என தெரிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

singer spb health
singer spb health

பாடகி சுசித்ரா ஒரு ட்வீட்டில், #RIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது என பதிவிட்டு உள்ளார். இதனால் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலே திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, துக்கம் கவலையில் இருக்கும் போது பேச்சு வராது, எல்லாத்தையும் மீறிய ஒரு சக்தி உள்ளது என கண்கலங்கியபடி தெரிவித்தார்.

spb and bharathiraja
spb and bharathiraja

இவ்வாறு அனைத்து பக்கத்தில் இருந்தும் எஸ்பிபி உடல்நிலை குறித்து நெகட்டிவ் ஆன தகவல்களே வருவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here