தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த, நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் விவாகரத்து முடிவை கடந்த 2022 ஆம் ஆண்டு தனித்தனியாக அறிவித்தனர். இதையடுத்து, இவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இவர்கள் கடந்த ஏப்ரல் 8ம் தேதி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இது ஒருபுறம் இருக்க, சில வாரங்களுக்கு முன் தனுஷை அழைத்து ரஜினிகாந்த் பேசியுள்ளாராம்.
மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டம்., ஆண்டுக்கு ரூ.436 மட்டுமே போதும்? காப்பீடு தொகை இவ்ளோ லட்சம்?
அந்த சந்திப்பில் குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழுமாறு தனுஷிடம் அவர் வலியுறுத்தியுள்ளாராம். ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இருவரும் சேர்வர்களா?? மாட்டார்களா?? என்ற குழப்பத்தில் உள்ள நிலையில் இப்பொழுது இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.