என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி இல்லை.. டெல்லி முதல்வரின் சிறை குறிப்பு வைரல்!!

0
என் பெயர்  அரவிந்த் கெஜ்ரிவால்.. நான் தீவிரவாதி இல்லை.. டெல்லி முதல்வரின் சிறை குறிப்பு வைரல்!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 28ஆம் தேதி கைது செய்தனர். அதன் பின் அவரது காவல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இதற்கிடையே இவர் சிறையில் இருந்து இப்போது புதிய குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால், நான் பயங்கரவாதி அல்ல, நீங்கள் இப்படி நடந்துகொள்ள வெட்கமாக இல்லையா? மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு கூட அனுமதி இல்லை. கண்ணாடி ஜன்னல் வழியாகவே சந்திக்க வேண்டும் என்கிறார்கள் என்று அவர் அனுப்பிய தகவலை ஆம் ஆத்மி கட்சியின் MP சஞ்சய் சிங் வாசித்துக் காட்டினார். தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here