இன்றைய காலகட்டத்தில் சாமானிய குடும்பங்கள் முதல் அனைவரும் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் காப்பீட்டு திட்டத்திலும், பெரிய அளவிலான தவணை தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) எனும் காப்பீடு திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 18 முதல் 50 வயது வரையில் உள்ள எவரும் ஆண்டுக்கு ரூ.436 மட்டுமே பிரீமியமாக செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் கணக்கிடப்பட்டு வருவதால், மே 25 முதல் மே 31க்குள் தவணை தொகையை செலுத்த வேண்டும். அப்படி செய்து விபத்து நேரிட்டு இறக்கும் பட்சத்தில், அவரின் நாமினிக்கு ரூ.2 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.