இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. கடந்த வருடம் இவர் நடித்திருந்த ”குஷி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இதன் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் நடிகை சமந்தா கூறிய முக்கிய கருத்து ஒன்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு சிட்டாடல் வெப் தொடரில் நடித்தேன், அந்த தொடரில் அதிகம் ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்ததால் நோயோடு மிகவும் கஷ்ட்டப்பட்டேன். ஒரு நாள் திடீரென மயங்கி விழுந்தேன். ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷ் எனக்கு பெருமளவு வழிகாட்டி உதவினார். அதனால் தான் என்னால் அந்த வெப் தொடரில் நடித்து முடிக்க முடிந்தது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.