தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்து வந்த இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஆக்சன் திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.
2024 ஆம் ஆண்டின் டெட் (TET) தேர்வுக்கு காத்திருக்கீங்களா? மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாஸிற்கு நடிகர் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அப்பொழுது தர்பார் படம் தோல்வி அடைந்த காரணத்தினால் சன் பிக்சர்ஸ், முருகதாஸிற்கு குறைவான சம்பளத்தை தர முன்வந்துள்ளனர். அவர்கள் கூறிய சம்பளத்தை ஏற்காததால் முருகதாஸ் விஜய் படத்தில் இருந்து வெளியேறினார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.