விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். பிக்பாஸ்க்கு பிறகு இவர் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது வந்து கொண்டே தான் உள்ளது. இப்படி இருக்கையில் இப்போது இவர் திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் முதலில் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இவர்களுக்கு ரீஹரி, ஜோவிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதில் மகன் தந்தையிடமும், மகள் தாயிடமும் வளர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதை தொடர்ந்து தொழிலதிபர் ஆனந்தராஜை 2 வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருக்கு இந்த திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இப்படி இருக்கையில் வனிதா மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது பேட்டியாளர்கள் கேட்ட கேள்விக்கு இப்போது வரை கிரஷ் யாருமே எனக்கு கிடையாது. நான் அந்த வயதை எல்லாம் தாண்டி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இப்போதைக்கு நான் சினிமாவை மட்டும் தான் காதலித்து வருகிறேன். அதில் மட்டும் தான் என்னுடைய கவனம் இருக்கும் என சினிமா மீது உள்ள காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் அப்போ நீங்கள் சினிமாவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என ட்ரோல் செய்து வருகின்றனர்.