கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் கொரோனா எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் காரோண தோற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இன்று மட்டும் 5,951 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா பரவிக்கொண்டு தான் உள்ளது.
தமிழகத்தில் 3,32,454 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 52,128 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 107 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். மொத்தமாக பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது.