இனி வரும் நாட்களில் இஎஸ்ஐ சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
“இஎஸ்ஐ சட்டம்” :
மத்திய அரசின் முன் அனுமதியுடன் கார்ப்பரேஷன் கடன்களை திரட்டவும், அத்தகைய கடன்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்த சட்டத்தின் மூலமாக முடியும். மேலும் இது அசையும் மற்றும் அசையாச் சொத்துகளையும் பெற வழிவகை செய்யும் சட்டம் ஆகும், இதுவே இஎஸ்ஐ சட்டம். தற்போது இந்த சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கு கடந்து வந்த பாதை:
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று அரசாணை வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ஆனால், இந்த வழக்கிற்கு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமல்படுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டனர். ஆனால், அதற்கு நேர்மாறாக, கேரள நீதிமன்றம் அமல்படுத்தலாம் என்று உத்தரவிட்டது.
தீர்ப்பில் குழப்பம்:
இந்த குழப்பத்தால், இந்த வழக்கை 3 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்குமாறு அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த 3 பெண் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், பி.டி. உஷா மற்றும் அனிதா சமத் ஆகியோர் இந்த சட்டம் அனைவர்க்கும் பொருந்தும் என்று அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – புதிய கல்வி கொள்கை இன்று வெளியீடு!!
இதில், கூடுதல் சிறப்பு என்னவென்றால், இப்படியாக 3 பெண் நீதிபதிகள் ஒரே அமர்வில் ஒரு வழக்கை விசாரித்தது இல்லை. இதுவே முதல் முறை. இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நீதித்துறையில் இப்படியாக ஒரு முறை கூட நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.