Sunday, May 5, 2024

முன்னாள் ஆதிமுக எம்.எல்.ஏ தலைமறைவின் காரணம் இதுதானா??

Must Read

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய , முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிறுமியின் தாய் புகார்

நாகர்கோவில் அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சிறுமியை தேடி மீட்ட போலீசார், சிறுமியுடன் இருந்த நபரை விசாரித்ததில் அவரது காதலன் என தெரியவந்தது. ஆகவே,சிறுமியுடன் சேர்த்து காதலனையும் கைது செய்தனர்.

திடுக்கிடும் தகவல்

இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் தனது தாயுடன் தகாத உறவில் இருந்ததாகவும், 2017ல் நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் தன்னையும் பாலியல் வன்கொடுமை செய்ததாககவும் சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அடடே அப்படியா!! ⇛⇛தெரு வியாபாரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட டெல்லி அரசு அனுமதி!!

வழக்குப்பதிவு

இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நால்வரையும் தேடி வருகின்றனர்.

 

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -