தற்செயலாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மும்பையை சேர்ந்த சிறுவனிடமிருந்து நானாவதி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.
நாணயத்தை விழுங்கினான்:
ஒரு விசித்திரமான சம்பவத்தில், 8 வயது சிறுவன் தற்செயலாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கினான். அது அவனது உணவுக் குழாயில் பதிந்து அவனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
எக்ஸ்ரே பிரச்சனையை வெளிப்படுத்தியதை அடுத்து அந்தேரியைச் சேர்ந்த அந்த சிறுவனை அவரது பெற்றோர் நானாவதி சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆறு மணிநேர போராட்டம்:
நாணயம் அவனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி, எதையும் சாப்பிட அல்லது குடிக்க முடியாமல் வாந்தியெடுத்தான். ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அலைந்த குடும்பத்திர்க்கு, இறுதியாக நானாவதி மருத்துவமனை ENT நிபுணரும் மூத்த ஆலோசகருமான டாக்டர் அமோல் பாட்டீல் சிறுவனுக்கு உதவினார்.
சிறுவன் நாணயம் காரணமாக மிகுந்த அசவுகரியத்தில் இருந்தான். பொருளை (நாணயம்) பிரித்தெடுப்பதற்கான எந்தவொரு தாமதமும் நோய்த்தொற்று அல்லது உணவுக்குழாயின் சிதைவு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும் ”என்று பாட்டீல் விளக்கினார்.
அறுவைசிகிச்சை:
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த பிறகு, அறுவைசிகிச்சை குழு ஒரு சிக்கலான உணவுக்குழாய் பரிசோதனையை நிகழ்த்தியது . சிறுவனின் வாய் வழியாக ஒரு எண்டோஸ்கோபிக் செயல்முறை – மற்றும் ஃபோர்செப்ஸின் உதவியுடன், ஒரு உலோக கம்பியில் நாணயத்தை விரைவாக பிரித்தெடுத்தனர்.
பின்னர், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தையை சிறிது நேரம் கண்காணிப்பில் வைத்திருந்து சாப்பிடும்போது எந்த அசவுகரியமும் காட்டாததால், அவனை வீட்டிற்க்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டது என்று பாட்டீல் கூறினார்.