நடிகை ஐஸ்வர்யா ராய் – மகளுடன் மருத்துவமனையில் அனுமதி!!

0
அட கொடுமையே.. பொண்ண இப்படியா வளர்ப்பிங்க - ஐஸ்வர்யா ராய்யை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா பச்சன் ஆகியோர் இன்று நானன்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மும்பையை மிரட்டும் கொரோனா:

மும்பையில் வசித்து வரும் இருவரும் கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானர்.அவர்கள் பச்சன் இல்லமான ஜல்சாவில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி:

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சனின் மாமனார், கடந்த வாரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவரது கணவர் அபிஷேக் பச்சனும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார். முன்னதாக அவர்கள் சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு மட்டுமே அவர்கள் குடும்பத்தில் தொற்று இல்லை.

“ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா இருவரும் இன்று நானன்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமாக உள்ளனர்” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அமிதாப் பச்சன் டுவீட்:

ஜூலை 11 ம் தேதி, அமிதாப் பச்சன் ட்விட்டரில் , “நான் கோவிட் தொற்றால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், முடிவுகள் வர இருக்கின்றன .. கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்தவர்கள் தயவுசெய்து தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறேன். ” என குறிப்பிட்டார்.

Amitabh Bachchan
Amitabh Bachchan

பிறகு, அபிஷேக் பச்சன், “டாக்டர்கள் முடிவு செய்யும் வரை நானும் எனது தந்தையும் மருத்துவமனையில் இருக்கிறோம். எல்லோரும் தயவுசெய்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். தயவுசெய்து எல்லா விதிகளையும் பின்பற்றுங்கள்” என்று ட்வீட் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here