குஜராத் மாநிலம் ஜாம் நகரில் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பிரபலமானவர் தான் கௌரவ் காந்தி. இவர் தன்னுடைய மருத்துவ வாழ்வில் இதுவரைக்கும் 16,000 இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்நிலையில் இவர் உயிரிழந்ததாக வெளியாகி செய்தி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது கடந்த கடந்த 5 ஆம் தேதி மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்து விட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இரவு நேர உணவை சாப்பிட்டு தூங்க சென்ற காந்தி, மறுநாள் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதனால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த செய்தி மருத்துவ வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 41 வயதான கௌரவ் காந்தி தனது திறமையால் பல உயிர்களை காப்பாற்றினார். ஆனால் இன்று இவர் மாரடைப்பால் இறந்த செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.