தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு…, ‘பிப்பர்ஜாய்’ புயலால் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு..., 'பிப்பர்ஜாய்' புயலால் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு..., 'பிப்பர்ஜாய்' புயலால் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

இந்தியாவின் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள ‘பிப்பர்ஜாய்’ புயலானது, தற்போது மும்பையின் தெற்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு திசை நோக்கி நகரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தாலும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும், இன்று (ஜூன் 7) முதல் ஜூன் 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தமிழக மற்றும் புதுச்சேரியில் அதிகப் பட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். ஆனால், சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே இருக்கும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

என்னது.., ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களா? ? பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!!

இதனால், சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையானது 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும். மேலும், ‘பிப்பர்ஜாய்’ புயலின் தாக்கத்தால் ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சாதாரணமாக 55 முதல் 100 கிலோ மீட்டருக்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here