உலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் அதன் வீரியம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த நாட்டு அரசாங்கம் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உலகம் முழுவதும் கொரோனாவால் 689,969,611 மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 662,417,141 மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 37,750 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6,888,210 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.