அரபிக் கடலில் உருவாகி உள்ள பிபோர் ஜோய் புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் வலுப்பெற்று தீவிரமடையும் போது கேரளா முதல் மராட்டியம் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தவிர இந்த பிபோர் ஜோய் புயலால் தமிழகத்திலும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர மன்னார் வளைகுடா, தென் தமிழகம் மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் புயலின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 9 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.