தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதால் 7 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு 12 ஆம் தேதி திறக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதன் படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுவதால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மிகவும் பாதிப்படைவதாக பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அந்தந்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அட விஜயகாந்த்-க்கு இப்படி நிலைமையா?? பெரிய ஆபத்தில் சிக்கிய சம்பவம்!!
அதன் படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலை 8.30 மணி முதல் 10 ஆம், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. அதன் பின் பள்ளிகள் திறந்தவுடன் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—