தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரஜினி, கமல் கொடி பறந்து கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக உள்ளே நுழைந்து தனது கொடியை நாட்டியவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும், அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்க பல தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கினார். ஒரு சில தயாரிப்பாளர்கள் இவரை ஹீரோவாக போட்டு படம் எடுத்த போது எல்லா படமும் படுதோல்வி அடைந்தது. இருந்தாலும் தொடர்ந்து வெற்றி வாகை சூட முயற்சி செய்த அவருக்கு இடி முழக்கம் என்ற திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுக்க தொடங்கி முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். இந்நிலையில் அவரின் நெருங்கிய நண்பரான ராவுத்தர் விஜயகாந்தை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளதாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அதாவது ராவுத்தர் விஜயகாந்த் நெருங்கிய நண்பராக இருந்ததால் அவருடைய எல்லா படங்களையும் ராவுத்தர் தான் முடிவு செய்வாராம். ரஜினி பீக்கில் இருந்த போது முரட்டுக்காளை படத்துக்கு வில்லனாக விஜயகாந்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதற்கு ராவுத்தர் விஜி நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பார் என்று மறுத்து விட்டார். ஏனென்றால் ஒரு ஹீரோ வில்லனாக நடித்தால் ஹீரோக்கான வாய்ப்புகள் நிராகரிக்கப்படும். இதற்கு உதாரணமாக விஜய் சேதுபதியை சொல்லலாம். அவர் வில்லனாக நடித்ததால் தான் அவரை ஹீரோவாக போட தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். அப்ப விஜயகாந்த் வில்லனாக நடித்திருந்தால் அவ்வளவு தான். அந்த பெரிய ஆபத்தில் இருந்து ராவுத்தர் தான் காப்பாற்றினார் என்று கூறியுள்ளார்.