தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்ட பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்திருந்தார். அதறகான கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாள் அன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்து அறிக்கை வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் கணக்கெடுக்கும் பணிகள் தற்போது தான் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மேலும் தமிழகத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்த படுவதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.