டெல்லியில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் புகார்களை முன் வைத்து இந்திய மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகட் தலைமையில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பிரிஜ் பூஷனுக்கு எதிராக இவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எண்ணி, கடந்த மாத இறுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற பகுதியில் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால், காவல்துறையினர் இவர்களை தடுத்து நிறுத்தியதோடு அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்ட ஒலிம்பிக் பதக்க வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறியை முற்பட்டனர். ஆனால், விவசாய அமைப்பினர், வீரர்களிடம் இருந்து பதக்கங்களை கைப்பற்றி இவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எச்சரித்து உள்ளது.
இவ்வாறு போராட்டம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் ரயில்வே பணிக்கே திரும்பியதாகவும் செய்திகள் பரவின. இதனை மறுத்த சாக்ஷி மாலிக், தவறான செய்திகளை பரப்பாதீர்கள். நீதிக்கான இந்த போராட்டத்திலிருந்து யாரும் பின்வாங்க வில்லை, பின்வாங்கவும் மாட்டோம் என தெரிவித்துள்ளார்.