தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் (ஜூன் 7) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் இன்றளவும் கோடை வெயில் தணியாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு தேதியை ஒத்தி வைக்க பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறப்பு தேதியை கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.
ஐய்யோ முடியல.., நாளுக்குநாள் அதிகரிக்கும் பாலியல் தொல்லை., கொந்தளித்த பிக்பாஸ் பிரபலம்!!
இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.