இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசானது பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் படி பிரதம மந்திரி(PM) கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வீதம் மூன்று தவணையாக ரூ.2000 மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு இதுவரை 13 தவணைகள் கிடைத்துள்ள நிலையில், 14 வது தவணை ஜூலை மாதம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இந்த 14 வது தவணையை விவசாயிகள் பெறுவதற்கு தற்போது விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, வேளாண்மை இயக்குனர் கூறியதாவது, PM கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஆதார் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.
ஜூன் 11ம் தேதி முதல் பெண்களுக்கு இது இலவசம்.., அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!!
ஜூலை மாதத்துக்குள் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 14 வது தவணை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் வேலூர் அஞ்சல் அலுவலகத்திலும், பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் வரும் 5 தேதி ஆதார் எண்ணுடன் இணைத்தல், சேமிப்பு கணக்கு தொடங்குதல் போன்ற பணிகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.