அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தை பொறுத்தவரை வருவாய் இழப்பு, கடன் சுமை உள்ளிட்ட கடும் நெருக்கடியில் அரசு இருந்த வந்ததால் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு தாமதமாகி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
இதன்மூலம் 16 லட்சம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு படி, அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.25,500 ஆக இருக்கும் பட்சத்தில் அகவிலைப்படி ரூ.10.710 ஆக உயர வாய்ப்புள்ளது. அதன்படி மாதாந்திர ஊதியத்தில் ரூ.1,020 வரை கூடுதலாக பெற முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.