கோலிவுட் திரையின் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லியோ படப்பிடிப்பில் தீவிரமாக இருந்து வருகிறார். இதுபோக அரசியலிலும் கால் பதித்து, அதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் நேற்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுபோக இவர் சினிமாவை தாண்டி வேறு தொழில்கள், அவரது பெயரில் திருமண மண்டபங்கள், வெளிநாடுகளில் சொத்துக்கள் என பல வழிகளில் தனது வருமானத்தை பெருக்கி வருகிறார். மேலும் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பழைய நேஷனல் திரையரங்கை வாங்கி அதை மல்டிபிளக்ஸ் திரையரங்காக மாற்றி அதன் மூலம் வருமானத்தை குவித்து வருகிறார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஊதிய உயர்வு ரூ.10,710?? வெளியான முக்கிய தகவல்!!!
இது போதாது என தற்போது புதிய ஒரு business சை விஜய் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் போன்றவற்றில், தான் சம்பாதித்ததை முதலீடு செய்து அதன் மூலம் தன் பண பலத்தை அதிகரிக்க முடிவெடுத்துள்ளாராம். இவரின் இப்படியான மாஸ்டர் பிளானை பார்த்த திரையுலகம் வாயடைத்து வியந்து நிற்கின்றனர்.