பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ தேவேந்திர நாத் ராய் இன்று காலை வடக்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே இறந்து கிடந்தார். பாஜக எம்எல்ஏவின் உடல் ஹேம்தாபாத்தின் பிண்டலில் அவரது வீட்டின் அருகே ஒரு கடையின் பால்கனியில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் இது கொலை என குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், பா.ஜ.க தலைவர் ராகுல் சின்ஹா, சிபிஐ விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கோரியுள்ளார்.
தற்கொலையா? கொலையா?
இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. பாஜக எம்.எல்.ஏ முதலில் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் கடையில் இருந்து தூக்கிலிடப்பட்டார் என்று அந்த இடத்தைச் சுற்றியுள்ள மக்கள் தெளிவாக நம்புகிறார்கள்.
Body of Shri Debendra Nath Ray, BJP MLA from Hemtabad, a reserved seat, in Uttar Dinajpur, was found hanging like this in Bindal, near his village home. People are of the clear opinion that he was first killed & then hung.
His crime? He joined the BJP in 2019.
Om Shanti. pic.twitter.com/Zqbh1BZZIq
— BJP Bengal (@BJP4Bengal) July 13, 2020
எம்.எல்.ஏ.வின் உடலைப் பெற்ற பாஜக தலைவர் ராகுல் சின்ஹா, ‘ஹேமாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ரே கொலை குறித்து சிபிஐ விசாரணை கோருகிறோம். இந்த கொலைக்கு பின்னால் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது, அதை தற்கொலை போல ஆக்கியுள்ளது. இந்த கொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை அறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மேற்கு வங்க முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன். ‘
தேவேந்திர நாத் ராய், சிபிஐஎம் டிக்கெட்டில் உத்தரா தினாஜ்பூர் மாவட்டத்தில் 2016 ஹேமதாபாத் சட்டசபை தொகுதியில் வென்றார், ஆனால் பின்னர் 2019 ல் பாஜகவில் சேர்ந்தார்.